சுமார் 4 வருடங்களின் பின் தாய் ஏர்வேஸ் விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
இவ் விமானம் தாய்லாந்து நாட்டின் பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தகவல் தெளிவுபடுத்தியுள்ளது .
அந்தவகையில் , தாய்லாந்து பிரஜைகள் உட்பட 150 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விமானத்தில் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் , தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகள் தினமும் இடம்பெறும் எனவும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .