சூரிச் விமான நிலையம் ஊடாக கடந்த ஆண்டு மே மாதத்தை விட, இந்த ஆண்டு மே மாதத்தில் அதிகளவு பயணிகள் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
மே மாதம் மொத்தம் 2.77 மில்லியன் பயணிகள் இதனூடாகப் பயணம் செய்துள்ளனர்.
இது மாதாந்த அடிப்படையில், முதல் முறையாக 2019 கோவிட் நெருக்கடிக்கு முந்தைய எண்ணிக்கையை விட அதிகமாகும்.
2023மே மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை 9% அதிகரித்துள்ளது.
தொற்றுநோய்க்கு முந்தைய நிலையுடன் (மே 2019) ஒப்பிடும்போது, இது 2 சதவீத அதிகரிப்பாகும்.
இந்த ஆண்டு மே 17 ஆம் திகதி ஒரு புதிய சாதனையாக, இந்த ஆண்டு முதல் முறையாக 100,000 க்கும் மேற்பட்ட பயணிகள் சூரிச் விமான நிலையம் வழியாக பயணம் செய்தனர்.
கடந்த ஆண்டு இதே மாதத்தை விட இந்த ஆண்டு மே மாதத்தில் சூரிச்சில் அதிக விமானங்கள் தரையிறங்கியன அல்லது புறப்பட்டன. விமான இயக்கங்களின் எண்ணிக்கை 7.5 சதவீதம் அதிகரித்து 23,762 ஆக இருந்தது.
ஆனால் மே 2019 இல் விமான இயக்கங்களின் எண்ணிக்கையில் 97.2 சதவீதத்தை மட்டுமே இந்த ஆண்டு எட்டியது.