24.9 C
New York
Saturday, July 27, 2024
spot_img

மண்டைதீவில் நாளை காணி சுவீகரிப்பு ; எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

யாழ்ப்பாணம்  மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கை நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், நாளை புதன்கிழமை அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles