17.2 C
New York
Monday, September 15, 2025
spot_img

மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கும் புதிய வைரஸ்

எபோலா வைரஸின் சில பகுதிகளைப் பயன்படுத்தி சீனாவின் ஹெபெய் மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய வைரஸை உருவாக்கியுள்ளனர்.

இது செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் விரைந்து பரவும் தன்மை கொண்டது. சீன ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸில் உள்ள கிளைகோபுரோட்டீனை இந்த வைரஸில் பயன்படுத்தியுள்ளனர்.
 
இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கும் திறன் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த வைரஸ் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.(

Related Articles

Latest Articles