குருநாகல் – கல்கமுவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பின்புறமாக புனரமைக்கப்பட்ட தொடருந்து பாதையில் பயணித்த மோட்டார் சைக்கிள் கால்வாயில் வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாலகடவலயிலிருந்து கல்கமுவ நகரை நோக்கி நிர்மாணிக்கப்பட்டு வரும் தொடருந்து பாதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த விபத்தில் பலுகடவல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.டி.சாமோத் வசல என்ற 17 வயதுடைய பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளார்.