27.1 C
New York
Sunday, May 18, 2025
spot_img

தற்போதைய பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் இலங்கையில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் விவாகரத்துக்கள்

நாட்டில் வருடாந்த இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் வருடாந்த பிறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளால் இளைஞர்கள் விவாகரத்து செய்யும் போக்கு காணப்படுவதாக பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
திணைக்களம் கூறுகிறது.

புதுமணத் தம்பதிகள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் விவாகரத்து செய்யும் போக்கு உள்ளதாக திணைக்களத்தின் சிவில் பதிவுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் திருமதி லக்ஷிகா கணேபொல தெரிவித்தார்.

இதுதவிர, பொருளாதாரப் பிரச்சினைகளால் சிகிச்சை பெற முடியாமல், மனநலப் பிரச்சினைகளின் தாக்கத்தால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுவது போன்ற காரணங்களால் நாட்டில் ஆண்டுதோறும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles