மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கையை வெளியிடும் போதே திணைக்களம் இதனைக் தெரிவித்துள்ளது
இதேவேளை, இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் மக்களை கேட்டுக் கொள்கிறது