இலங்கையின் தென்கிழக்கே தென் இந்தியப் பெருங்கடலில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக மாலைதீவு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.