9.2 C
New York
Friday, October 18, 2024
spot_img

யாழில். சகோதரனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சகோதரி

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் சகோதரன் உள்ளிட்ட கும்பல் ஒன்றினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான பொலிஸ் விசாரணையில் , சகோதரன் மாத்திரமே சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், தாய் தந்தையை இழந்த பின்னர் , சகோதரியுடன் வடமராட்சி பகுதியில் உள்ள பெண்கள் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் , சகோதரி கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்துள்ளார்.

அதனை அடுத்து , சகோதரன் காப்பகத்திலிருந்த தனது சகோதரியை , வீட்டிற்கு கடந்த ஜனவரி மாதம் அழைத்து வந்துள்ளார்.

ஜனவரி மாதத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் வரையில் சகோதரிக்குப் போதை ஊசியினை செலுத்தியும் , மதுபானம் உள்ளிட்டவற்றைக் கொடுத்தான் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.

ஏப்ரல் மாதம் பெண்ணின் உடல் நிலை மோசமடைந்தமையை அடுத்து மீண்டும் காப்பகத்தில் அவரை சேர்த்துள்ளார். அங்கு பெண்ணின் உடல் நிலை மோசமானதை அடுத்து , பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தமையும் , சித்திரவதைகளுக்கு உள்ளானமையும் கண்டறியப்பட்டது. அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

Related Articles

Latest Articles