9.6 C
New York
Sunday, March 8, 2026
spot_img

ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் – கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும் மக்கள்

ஆசிய பிராந்திய நாடுகளை பாதித்துள்ள அதிக வெப்பம் காரணமாக கிழக்கு இந்திய மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளனர்.

கிழக்கு இந்தியாவில் கடந்த 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான மிக அதிகளவான வெப்பநிலை இந்த ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவை பாதித்துள்ள இந்த வெயிலின் தாக்கத்தால், இதுவரை 9 பேர் உயிரிழந்தனர்.

பங்களாதேஷிலும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பமான வானிலை பதிவாகியுள்ளதுடன் 7 தசாப்தங்களின் பின்னர் நாட்டை பாதித்த மிக மோசமான வெப்ப அலை வானிலையாக இது பதிவுகியுள்ளது.

Related Articles

Latest Articles