யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார் .
நேற்றய தினம் மட்டி எடுப்பதற்கு கடலுக்குள் சென்றவர் காணாமல் போன நிலையிலேயே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .