-2.2 C
New York
Wednesday, February 5, 2025
spot_img

உயர்தரப் பரீட்சையில் ‘3 ஏ’ அள்ளிக் குவித்த யாழ். மாணவர்கள்!

நேற்று வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை -2023 பெறுபேற்றின் அடிப்படையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 2ஏ சித்திகளை 30 மாணவர்களும் ஏ2பி சித்திகளை 24 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 29 மாணவிகள் அங்கு 2ஏ பி சித்தியை பெற்றுள்ளனர்.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 21 மாணவர்கள் 3 ஏ பெறுபேற்றைப் பெற்றுள்ளனர்.

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 9 மாணவிகள் 3 ஏ பெறுபேற்றை பெற்றுக்கொண்டுள்ளனர். +

சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 19 மாணவர்கள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் கணிதப் பிரிவில் 4 மாணவர்களும், விஞ்ஞானப் பிரிவில் ஒருவருமான 5 மாணவர்கள் 3 ஏ சித்தியைப் பெற்றுள்ளனர்.

Related Articles

Latest Articles