16.5 C
New York
Sunday, June 1, 2025
spot_img

கடும் வறட்சியால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு

நாட்டில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து உள்ளதாக முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

அனர்த்த முகாமைத்துவம் நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான மக்கள் பாதிப்படைந்துள்ளதாக குறித்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது

இந்த நிலையில் வறட்சியான காலநிலை காரணமாக கேகாலை மாவட்டத்தில் 2819பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 949பேரும் பதுளை மாவட்டத்தில் 190பேரும்
பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Latest Articles